Uncategorized|

“மக்களுடன் ஸ்டாலின்” எனும் மக்களுக்கான செயலி!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் “மக்களுடன் ஸ்டாலின்” என்ற செயலியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். இந்த செயலியில் திமுக அரசின் செயல்பாடுகள், ஒவ்வொரு தொகுதியை பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் மற்றும் திராவிட தத்துவம் சார்ந்த தகவல்கள் இந்த செயலியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைநோக்குத் திட்டம்!

மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியானது அண்ணாதுரையின் தொலைநோக்குப் பார்வையுடன் அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு எளிதில் சென்றடைய செய்ய இந்த செயலி உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து தெரிந்துகொள்வதற்கு வசதியாக இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுடன் ஸ்டாலின் செயலியின் விவரம்!

மக்களுடன் ஸ்டாலின் செயலியானது தமிழ்நாட்டில் அரசு தொடர்பான தகவல் மற்றும் சேவைகளை எளிதாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் போன்ற பொதுமக்களுக்கு தொடர்புடைய திட்டங்களை கண்டறிய உதவுவதன் மூலம், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் தொகுதி சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த செயலி மூலம் பயனர்கள் முதலமைச்சர், எம்.ஏல்.ஏக்கள் மற்றும் திமுக உறுப்பினர்களிடம் கேள்விகளை கேட்கலாம் என்றும், பயனர்கள் தங்கள் தொகுதி சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை பகிரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமக்கான திட்டங்களை அறிய!

செயலியின் ஒரு பிரிவில் “உங்கள் திட்டங்கள்” என்ற பொத்தான் இருக்கும். பொதுமக்கள் பதிவு செய்யும் சுயவிவரத்தைப் பொறுத்து, எது பொருந்துமோ அந்த திட்டங்கள் சார்ந்த தகவல் தன்னிச்சையாக இச்செயலியில் வரும்.

தி.மு.க மக்களுக்கு என்ன செய்தது என்றும், தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என்றும் ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும் முழுதாக தெரிந்து கொள்ளலாம். மேலும், 234 தொகுதிகளைப் பற்றிய அரசின் திட்டங்கள் சார்ந்த முழு தகவல்கள் இருக்கும்.

இச்செயலியில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் பற்றியும், முதலமைச்சரின் களச் செயல்பாடுகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முதல் கட்சி உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் பொதுமக்களே கேள்விகளைக் கேட்கலாம்.

அனைவருக்கும் அனைத்தும்!

முதலமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என யாரிடம் வேண்டுமென்றாலும் இந்த செயலின் வாயிலாகப் பொதுமக்கள் அழைத்துப் பேசலாம் என தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிடத்தின் முப்பெரும் தலைவர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வழித்தோன்றலான, நமது தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் “எல்லோருக்கும் எல்லாமும்” கிடைத்தாக வேண்டும் என்ற திராவிட கோட்பாட்டின்படி “மக்களுடன் ஸ்டாலின்” என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் அனைத்தையும் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற அண்ணாவின் குறிக்கோளின்படியும்மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் இந்த செயலியின் மூலம் ஒரே சொடுக்கில் தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

“மக்களுடன் ஸ்டாலின்” செயலியின் சிறப்பம்சம்!

செயலியின் ஒரு பிரிவில் உங்கள் திட்டங்கள் என்று ஒரு பொத்தான் இருக்கும். பொதுமக்கள் பதிவு செய்யும் சுயவிவரத்தைப் பொறுத்து, எது பொருந்துமோ அந்த திட்டங்கள் சார்ந்த தகவல் தன்னிச்சையாக இச்செயலியில் வரும். குழந்தைகள், முதியோர், பெண்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் என்று யாருக்கு எந்தத் திட்டம் தேவை என்பதை எளிதாக அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு என்ன செய்தது!

தி.மு.க மக்களுக்கு என்ன செய்தது என்றும், தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என்றும் ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும் முழுதாக தெரிந்து கொள்ளலாம். மேலும், 234 தொகுதிகளைப் பற்றிய அரசின் திட்டங்கள் சார்ந்த முழு தகவல்கள் இருக்கும். இச்செயலியில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் பற்றியும், முதலமைச்சரின் களச் செயல்பாடுகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

அனைவருக்கும் ஏற்ற திட்டங்களை அமல்படுத்துவது மட்டுமின்றி, அதை கடைக்கோடி மக்களுக்கும், எளிமையான வழியில் கொண்டு சேர்ப்பதே அரசின் கடமையாகும். அத்தகைய தொலைநோக்கு பார்வையோடும், அடிப்படைத் தேவை என்னவென்ற புரிதலோடும் வடிவமைக்கப்பட்டதே “மக்களுடன் ஸ்டாலின்” என்ற செயலி என்றும், எனவே இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து வளமான தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றாகச் செயல்படுவோம்.

 

Comments are closed.

Close Search Window